இரண்டாண்டு கால உழைப்பிற்கு ஓய்வு கொடுத்துள்ளது ‘எந்திரன் யூனிட். இதனை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரஜினி.
இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டமாக ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள ‘எந்திரன்‘ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் இதுவரை இந்தியப்பட உலகில் யாரும் உருவாக்காத அளவுக்கு, படவுலகமே வியப்பின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு, மிகப்பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு, 2 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்தது.
ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருந்த நிலையில் கடந்த 7 -ம் தேதி அந்த பாடலும் எடுத்து முடிக்கப்பட்டது. படப்பிடிப்பின் நிறைவு நாளில் சன் பிக்சர்ஸ் சார்பில் ரஜினி, ஷங்கர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு விருந்தளிக்கப்பட்டது. இதற்கு மறுநாள் ரஜினி சார்பில் படப்பிடிப்பு குழுவினருக்கு விருந்தளிக்கப்பட்டது. ரஜினிக்கு சொந்தமான கேளம்பாக்கம் பண்ணையில் நடந்த இந்த பார்ட்டியில் ரஜினி சக நடிகர்,நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் உற்சாகமாக இருந்தாராம். அப்போது ‘எந்திரன் இருநூறு நாட்கள் ஓடும் என்ற தனது ஆரூடத்தை சொல்லி ஷங்கரை ஆனந்தப்படுத்தினாராம்.

No comments:
Post a Comment